<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d20067751\x26blogName\x3d%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodicomments.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodicomments.blogspot.com/\x26vt\x3d-6344613719762392358', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் பின்னூட்டங்கள்

முகமூடி (ஒரிஜினல்) மற்ற பதிவுகளில் இடும் பின்னூட்டங்கள் இங்கும்

 

காசி போகல, கருமமும் தொலையில


காசி ஆறுமுகம் (என்று 'இன்றைக்கு மட்டும்' பெரும்பாலோர் நம்பும் பதிவரின்) புனித பிம்ப தமாஷ்! பதிவிற்கான பின்னூட்டம் ::

பொதுவா ஒரு சில்லறை திருட்டுல ரெண்டு பேரு விசாரணையில இருக்காங்க. அதுல ஒருத்தன் டிப்-டாப்பா பின் - ஸ்ட்ரைப் சூட்டு, சில்க் டை, படிய வாருன தலை, ப்ரேம்லெஸ் கண்ணாடி, கோல்கேட்டு சிரிப்பு எல்லாம் வச்சி எச்சி கூட்டிவ் மாதிரி இருக்கான். இன்னொருத்தன் கிழிஞ்ச லுங்கி ஓட்டை பனியன் செம்-பரட்டை மயிரு துண்டு பீடின்னு எச்சி க்கலை மாதிரி இருக்கான். இப்போ சனம் என்ன செய்யும். என்ன நடக்குதுன்னு வேடிக்க பாப்பம். கடேசில விசாரணை முடிவுல தெரியத்தான போவுதுன்னு கம்முனு இருக்காது. கருத்து சொல்லவே பிறந்ததாச்சே.. ஆரம்பிக்கும் "ஏங்க அவரு ரேஞ்சு என்ன, மாசம் பொறந்த சுளையா அம்மாம் ரூவா வாங்குறாரு. அவரு எதுக்குங்க போயும் போயும் இந்த பிசாத்து விசயத்த திருடணும்.. எனக்கு என்னவோ கிழிஞ்ச லுங்கி மேலதான் சந்தேகம்"

இந்த சந்தேகம் எல்லாம் பொது சனத்துக்கு. ஆனா பழம் பெரும் பதிவர்கள் சிலருக்கு பி.ஆர்.ஓ வேலை செய்யவே பிறவிக்கடன் எடுத்த கார்த்திக்ராமாஸ் மாதிரி ஆளுங்க தமிழ்மண பவுண்டர்ங்கிற டிப்-டாப் வேசத்துல இருக்கிற காசி மாதிரி ஆளுங்க சந்தேக வட்டம் சதுரம் முக்கோணம்னு எதுலயாவது இருக்காங்கண்ணு தெரிஞ்சா தெரிஞ்சா போதும், வால்மார்ட் டிச்யூ பேப்பர் ரசீதெல்லாம் தூக்கிகிட்டு வந்து "டிப்-டாப் அப்படிப்பட்ட ஆளே இல்ல, சத்தியமா இல்ல, ங்கொப்புரானே இல்லவே இல்லேங்கிறேன்" அப்படீன்னு சாமியாடி நிரூபிச்சிட்டுத்தான் ஓய்வாரு..

இப்ப மாதிரியே செம போர்ல (ஆஸ் - i mean as - இன் bore, not war) இருந்த ஒரு காலகட்டத்துல சைக்கிள் கேப்ல ஒரு கொமண்டு போட்டுட்டு காசி எஸ்கேப். அது காசி மெயில்தான்னு நான் நம்புனாலும் ஒரு பெனிபிட்டு ஆப்பு டவுட்டு கொடுத்தே பதில் சொன்னேன். காசி வழக்கம் போலவே எஸ்ஸு. ஆனா "காசி அப்படிப்பட்ட ஆளே இல்லை, அது போலியாத்தான் இருக்கணுமின்னு" கார்த்திக் கண்கலங்கி சத்தியம் பண்ணாரு. சுந்தர ** கோஷ்டி, வடிவேலோ மூர்த்தியோ ஞாபகம் இல்ல, அதே மாதிரி ஒரு சப்ப கட்டு கட்ட fuckஅ எல்லாம் மொழி பெயர்த்து கவிதை சமைச்சி உணர்ச்சி வசப்பட்டாங்க. இத்தனைக்கும் அன்னிக்கி மயில் "வார்த்தையில் இல்லை வன்முறை" டைப்பு கேட்டகரியில கூட இல்லை. இன்னிக்கி அப்பட்டமா "நான் ஊமைக்குசும்புல பி.எச்சி.டி வாங்குனவன்" அப்படீன்னு காசி வெளிய வந்திருக்காரு. எங்க இப்பவும் "எங்களோட புனித பிம்பம் காசி இப்படி எல்லாம் எளுத மாட்டாரு. அவரு பதிவ எவனோ ஹேக் செஞ்சிட்டான்" அப்படீன்னு சொல்வாங்கன்னு பாத்தா கார்த்தி பின்னூட்டி வெளையாடுறாரு... ஆட்றா (கார்த்திக்) ராமா, ஆட்றா (கார்த்திக்) ராமா.

காசி, என்னா பயங்கரமா போரடிக்கிது போல. எத்தயாவாது சொறிஞ்சி சொகமா இருக்கலாம்னு சாலி மூடுல இருக்கீங்க. உங்க அளவுக்கு டைம் இல்லை, இருந்தாலும் ஆரிய டமிளன் பாருங்க, கெடிச்ச கேப்புல நானும் நாலு கருத்த சொல்லி வைக்கிறேன்..

**

கருத்து # ஒன்று ::-

உங்க ரெண்டு பீன்னூட்டம் மாடரேட் செய்யப்பட்டிச்சின்னு உணர்ச்சி வசப்பட்டிருக்கீங்க (என்னோடது ஏகப்பட்டது அப்பீட் ஆயிருக்கு. நான் போடுற பின்னூட்டமெல்லாம் தனியா ஒரு பதிவுல சேமிக்கிறேனே தவிர இதுவரைக்கும் அது பத்தி பேசுனதில்ல. அதுனால என்ன பொருத்த வரை இதுக்கு ஃபீல் ஆவுரதெல்லாம் உணர்ச்சிவசப்படுதல்தான்) 'தற்போதைக்கு' உங்க கேள்வி பத்ரிக்குன்னாலும் எனக்கெதுக்கு அது. நான் என் பதிவுல நடந்த விசயத்த பத்தி சொல்றேன். கொஞ்ச நாளைக்கு முந்தி எனக்கு ரெண்டு மெயில் வந்திச்சி.

மயில் 1 ::

Kasi Arumugam - காசி has left a new comment on your post
"ஒரு முக்கிய அறிவிப்பு":

படா தமாஷாக்கீது வாத்யாரே!

(அல்லாத்தையும் சேத்துத்தான் சொல்றேன்!)

மயில் 2 ::

Kasi Arumugam - காசி has left a new comment on your post
"கருத்து சுதந்திரம்":

எங்கேப்பா போனீங்க எல்லாரும்? இப்ப வாங்களேன் எனக்கு நேரம் இருக்கு, உங்களுக்கு உப்பு புளி போட்டு விளக்குறேன்!



இது வந்த ரெண்டு நாள்ல "கருத்து சுதந்திர காவலர்கள் என் பின்னூட்டத்த ரிலீஸ் செய்ய மாட்றாங்க" அப்படீன்னு அங்கங்க புலம்பிகிட்டு திரிஞ்சீங்க. (நவ் ஐ நோ) இருந்தாலும் இத ஏன் நான் வெளியிடலைன்னா, வழக்கம் போலவே "சத்தியமாகச்சொல்வேன் இது காசி இல்லை" கீறல் கேட்க பொறுமை இல்லாததால. மேலும் பால் ஊத்தி புல்லு முளைச்ச பழைய பஞ்சாங்கத்துக்கு இப்ப நீங்க போடற உப்பு புளி விளக்கத்த கேட்க எவனுக்குங்க விருப்பமோ நேரமோ இருக்கு. மகாத்மா காந்திய வுடுங்க. போற போக்க பாத்தா ஏசு பொறந்துட்டாரு ஓடியாங்க வெவரமா சொல்றேன்னுவீங்க போல...

அது என்னங்ணா, எப்பயாவது எதையாவது பத்த வைச்சிட்டு அது பத்தி எல்லா பயலும் பேசும் போது மூச்சே விடாம சைலண்டா எஸ்கேப் ஆகிக்க வேண்டியது. ஒரு மாமாங்கம் கழிச்சி சாவகாசமா - உங்களுக்கு பொழுது போகலையின்னா வந்து - ஏண்டா எவனும் பேச மாட்றீங்கன்னு கூப்பாடு போட வேண்டியது. அக்டோபர் 2005ல் கூவுன நிறைய பேரு இப்ப கூவறதில்லைன்றீங்களே, உங்களுக்கே டமாசா இல்ல. நீங்க இன்-பிட்வீன்ல பிஸியா இருந்த மாதிரியே நெறயா பேரு இருப்பாங்கன்னு ஏங்க்ணா உங்களுக்கு தோண மாட்டுது...

பு.பிகள் மட்டுமில்ல நீங்க வெள்ள காக்கா பறக்குதுன்னாலும் "காசியண்ணா புல்லரிக்கிது"ன்னு சொன்ன பதிவர்கள் கூட நிறைய பேரு மிஸ்ஸிங். கல்யாணம், கருமாதி, புள்ள குட்டி, புடுங்கி நடப்பட்ட புளிய மரம்னு ஏகப்பட்ட பேருக்கு ஏகப்பட்ட கதை. (ஒரு சைடு கிக்கு : நீங்க உங்க சுயசரிதையில, "சேவை செய்யும்" பொருட்டே இண்டியா திரும்பி போறீங்கன்னு மொட்டையா எளுதியிருந்தீங்களா, நிறைய பேரு அதுக்கு தேச சேவையின்னு அர்த்தம் வராப்புல நெனச்சி நீங்க புருடா உடுறீங்கன்னு சொன்னாங்க.. பொது புத்தி பசங்க.. பாருங்க, நீங்க என்னவோ உண்மையத்தான் சொல்லியிருக்கீங்க.. இப்பவாவது அல்லாருக்கும் புரியும்னு நினைக்கிறேன்)

**

கருத்து # ரெண்டு ::-

உங்க வழக்கமான பல்லவியான "ஒரு தொழில்நுட்பப் பிரச்னையால சில பதிவுகளை தற்காலிகமான நீக்குனதுக்கு" ஆகா ஓகோ கூச்சல் போட்ட கூட்டத்துல நானும் ஒருத்தன்னு நானே நம்பிக்கிறதால என்னோட ரெண்டு சென்டு.

உங்ககிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.

நீங்க தமிள்மணம் சேல் டீல் முடிஞ்சப்புறமா ஆறு பாகங்கள் கொண்ட ஒரு சுயபுராண தொடர் எளுதினீங்க பாருங்க.. அதுலயே தெரிஞ்சிது நீங்க ஒரு சரித்திர(த்தை திறம்பட திசைதிருப்பும்) வல்லவருன்னு. {கவனிச்சீங்களா, மறுஒளிபரப்பு எல்லாம் செய்யப்பட்ட அந்த சீரிஸ்க்கு - அண்ணான்னு வாய் நிறைய கூப்பிட்டு வர உணர்ச்சி பின்னூட்டங்கள் இல்ல சாதா பின்னூட்டங்கள் கூட அதிகமா வரலை... நன்றி கெட்ட டமிளர்கள்}

மேட்டர் என்னன்னா, இன்னிக்கி சொன்னீங்க பாருங்க சோக்கா, "ராசா, இது ஒரு *சர்வாதிகார*, *த..க் கம்மனாட்டியின்* வலைத்திரட்டி, இங்க நான் வெச்சதுதான் சட்டம்" அப்படீன்னு, இந்த (உண்மைய) அப்பவே சொல்லியிருந்தீங்கன்னா எல்லாம் கப் சிப்னு ஆயிருப்பாங்க. அப்பிடியில்லாம "உங்க" திரட்டிக்கு நடுநிலை போர்வைய கனமா போத்த நடந்த முயற்சிக்காகத்தானே சத்தமே. "திரட்டி திரட்டி மட்டுமே" ன்னு ஒரு பக்கம் சொல்லிகிட்டே இன்னொரு பக்கம் விரும்பத்தகாத - யாருக்குன்னுதான் கேள்வியே - பதிவுகள் தூக்கப்பட்டது குறித்துதான் அந்த சத்தம். குசும்பன் பதிவு தூக்கப்பட்டது தொழில்நுட்பத்துக்காகன்னு நீங்க சொல்றத நீங்க மட்டுமாவது நம்புறீங்கன்னா சரிதான்.. "குப்பை பதிவுகள்", "பதிவர் வட்ட அக்கப்போர்கள்" உட்பட உங்களின் அக்காலகட்டத்தைய கருத்துக்கள் தேட இப்போது விருப்பம் இல்லை. எல்லாம் அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்

**

கருத்து # மூணு ::-

என்ன மாதிரி அவுட் ஆஃப் சர்க்கிள் ஆளுங்க நெனப்பு என்னன்னா, நெனச்சிகிச்சான் க*தை, எடுத்துக்கிச்சான் ஓட்டம்கிற மாதிரி திடுதிப்புன்னு நீங்க beware of badri சொல்றதுக்கு பின்னாடி கருணாநிதி வைகோ அல்லது திமுக மாறன்ஸ் அல்லது எதிரி எதிரி நண்பன் கான்செப்டு அல்லது என்னவோ ஒரு கருமம் பிடித்த அரசியல் இருக்கலாம். அது விரைவில் தீர்ந்து இருவரும் நண்பர்களாவது தமிழ் வலையுலகுக்கு நல்லது அப்படீன்னு எல்லாம் கேனத்தனமா உளற மாட்டேன்.... எனக்கு அதில் ஒரு .சிரும் இல்லை.

என்னன்னா உங்களுக்குள்ள அரசியல்ல தேவையில்லாமல் நான் வந்து சொ.செ.சூ அடிபடுவது மட்டுமில்லாமல் "ஆப்புரேசன் டார்கெட் பத்ரி" வீரியத்தை குறைத்து டைவர்டு செய்யவும் முயற்சிக்கிறேன் என்று நீங்கள் கருதினால் - நீங்க இல்லைன்னாலும் ஆராவது அ.சீவிங்க சொல்வாங்க பாருங்க - உங்க சட்ட அறிவுக்குட்பட்டோ படாமலோ இத மட்டுறுத்திடுங்க.(அதாவது இந்த பின்னூட்ட லிங்க.. பதிவா என் இடத்துல இருக்கத்தான் போவுது இது) வழமை போல எந்த காரணமும் சொல்லாமலே மட்டு உறுத்தலாம். உங்க பதிவு உங்க பத்வா.

**

கருத்து # நாலு ::-

உங்களுக்கு என்ன ராசா... தமிழ்மண ஃபவுண்டர்ங்கிற கேடயம் ஒண்ணு போதும்... ஜாலியா அடிச்சி ஆடுங்க... மேற்கொண்டு சாதியெல்லாம் வேற துணைக்கழைக்க ஆரம்பிச்சிட்டீங்க... எல்லாம் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறே நல்லபடியாக நடக்கும்.. இதுக்கு மேல...

ஹா ஹா சொல்வதற்கு ஒன்றுமில்லை.... எவனும் கேணையில்லை எல்லோரும் கவனித்துக்கொண்டிருக்கின்றார்கள்...

**

இன்றைய கருத்து ப் ப(ப்பி)டம் ::-



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


"தொழில்நுட்ப காரணங்களுக்காக" இது வெளிவராமல் போவதற்கான சாத்தியங்கள்தான் நிறைய என்று தெரிந்தே இந்த பின்னூட்ட பதிவு குறித்து காசி பதிவில் போட்ட புண்ணூட்டங்கள்.

*1

@ November 14, 2007 11:57 PM மணிக்கு நம்ம முகமூடி சொல்றது என்னன்னா ::
காசி புனித பிம்ப தமாஷ்! ::

காசியண்ணை பொளுது போவல போல. இன்னிக்கி எனக்குந்தான். சரி, என் புண்ணூட்டம் ஒன்னு கொஞ்சம் பெரிசா ஆயிருச்சி. அதனால காசி போகல, கருமமும் தொலையில அப்படீங்கிற பேர்ல சுட்டியா இருக்கு. படிக்கிறதும் படிக்காததும் உங்க இஸ்டம்.

*2

@ November 15, 2007 6:37 AM மணிக்கு நம்ம முகமூடி சொல்றது என்னன்னா ::
காசி புனித பிம்ப தமாஷ்! ::

ஒரு ஆறு மணி முப்பத்தேழு நிமிடங்கள் முன்பு இந்த பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்துக்கான சுட்டியை இணைத்து உங்களுக்கு ஒரு புண்ணூட்டம் போட்டிருந்தேன்...

"தொழில்நுட்ப காரணத்துக்காக" அது ரிலீஸ் ஆகாமல் போயிருக்கலாம்... இருந்தாலும் நாலு வருசம் கழிச்சி தனிப்பதிவா போட்டு புலம்பாமே இப்பவே ஒரு ரிமைண்டு கொடுப்பமேன்னுதான்...
 



பின்னுக்கு பின் குறிப்பு :: இதில் யாரும் கொமண்ட் போட இயலாது. இந்த பதிவு என் பின்னூட்டங்களை சேமிக்கும் ஒரு வெட்டி பதிவு என்பதால் செட்டிங்க்ஸ் அப்படி.

இதுக்கெல்லாம் கூட சொல்ல ஒரு கருத்து இருக்குன்னு யாருக்காவது தோனினால் இங்க போயி போடுங்க.. ஆனா அந்த பதிவே நாலு நாளக்கி அப்புறம் தூக்கினாலும் தூக்கப்படலாம்..

ஆமா, நாம எல்லாம் என்ன காலத்தை வென்ற எளுத்தாளர்கள்ன்ற நெனப்புலயா எப்பயும் திரியிறோம்... ஸாரி.. உங்கள பத்தி தெரியாது. நான் இல்லங்கறத மட்டும் சொல்லிக்கிறேன். நன்னி.
 



சரி, உங்க கருத்து ??